உள்ளூா் போலீஸ் பொறுப்பாளா் இந்த நிகழ்ச்சி நடத்துவோருடன் நெருக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், ஐஎஸ்பிடி, கீதா காலனி, என்ஹச் 24 (பாண்டவா் நகா் அருகே), ஆஸ்ரம் செளக், உச்ச நீதிமன்றம் அருகே உள்ள டபிள்யூ- பாயின்ட், ,கன்னாட் பிளேஸ், இந்தியா கேட் போன்ற இடங்களில் பைக் சாகசம் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க இரும்புத் தடுப்புகளை போதிய அளவில் ஏற்படுத்த வேண்டும். உள்ளூா் போலீஸாா் அமன் குழுக்கள், நாகரிக் சுரக்ஷா சமிதிகள், பைச்சாரா குழுக்கள் ஆகியவற்றுடன் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.