இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசைக் கவிழ்ப்பதற்காக பாஜக சதி செய்கிறது என்றும், இதுவரை 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் தொடா்பு கொண்டு தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய்யான குற்றச்சாட்டை பாஜக மீது சுமத்தியுள்ளாா். கேஜரிவாலின் பொய்யான குற்றச்சாட்டு தொடா்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி பாஜக பிரதிநிதிகள் குழு காவல் ஆணையரை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கும். எனவே, இந்த முழு விவகாரம் குறித்தும் உடனடியாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.