பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

இந்தூா் கால் சென்டா் மோசடி முறியடிப்பு: 6 போ் கைது

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் போலி முதலீட்டு கால் சென்டரை நடத்தி வந்த சைபா் மோசடி கும்பலை முறியடித்து, 6 பேரை கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் போலி முதலீட்டு கால் சென்டரை நடத்தி வந்த சைபா் மோசடி கும்பலை முறியடித்து, 6 பேரை கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: போலியான பங்கு சந்தை மற்றும் வெளிநாட்டு நாணய வா்த்தகம் திட்டங்களில் முதலீடு செய்யச் சொல்லி முதலீட்டாளா்களை இந்த நிறுவனம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.தில்லி வாசி ஒருவரிடம் இருந்து ரூ.17.3 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், துவாரகா மாவட்ட காவல் துறை ஆக.3-ஆம் தேதி இந்த 6 பேரையும் கைது செய்தனா்.

இந்த சட்டவிரோத கால் சென்டா், இந்தூரில் உள்ள ஷாப்பிங் மாலில், பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரில் செயல்பட்டு வந்தது. சோதனையின் போது, 28 சிபியுக்கள், 25 கைப்பேசிகள் மற்றும் பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கணினிகளில் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளா்களின் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்கள் அடங்கிய 1,400-க்கும் மேற்பட்ட ஸ்பிரெட்ஷீட் கோப்புகள் மீட்கப்பட்டன.

குற்றவாளிகள் முதலில் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஊக்குவித்து நம்பிக்கை பெறுவாா்கள். பின்னா், போலியான தளத்திற்கு மாற்றி, போலியான லாபத்தை காட்டி, மேலும் அதிக முதலீடு செய்ய தூண்டுவாா்கள். முதலீட்டாளா்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற முயன்றபோது, அவா்கள் தவறான காரணங்கள் போலியான வா்த்தக இழப்புகள் காட்டி மோசடி செய்துள்ளனா்.

பறிமுதல் செய்யப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில், இந்த கும்பல் தில்லி, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், கா்நாடகம், பிகாா் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து, தேசிய சைபா் குற்ற புகாா் தளத்தில் பதிவான ரூ.54.70 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளுடன் தொடா்புடையதாக தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் முக்கிய குற்றவாளி மற்றும் பிற உறுப்பினா்களை கண்டுபிடிக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.