15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் கட்டடங்கள் திறப்பு

நாகர்கோவில், ஜன.16: தென்தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிகளில் ரூ. 11 லட்சத்தில்  கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தென்தாமரைக்குளம் பேரூராட்சித் தலைவி அன்புவாணி ஜ

Updated On :20 செப்டம்பர் 2012, 7:26 am IST

நாகர்கோவில், ஜன.16: தென்தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிகளில் ரூ. 11 லட்சத்தில்  கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தென்தாமரைக்குளம் பேரூராட்சித் தலைவி அன்புவாணி ஜெகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.கே.என். மார்த்தாண்டன், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் என். தாமரைபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ. 4.50 லட்சத்தில் விஜயநகரியில் மேல்நிலைக் குடிநீர்த்தேக்கத் தொட்டி, இலந்சையடிவிளை, புன்னையடியில் தலா ரூ. 2 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடங்கள், கிண்ணிகண்ணன்விளையில் ரூ. 2 லட்சத்தில் கலையரங்கம், தேரிவிளையில் ரூ. 75 ஆயிரத்தில் பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் திறந்துவைத்துப் பேசினார்.

பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் வரவேற்றார். கிண்ணிகண்ணன்விளை ஊர் கமிட்டி தலைவர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.