தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பாளை. பெருமாள் கோயிலில் இன்று பங்குனி பிரமோத்ஸவ கொடியேற்றம்

பாளை. பெருமாள் கோயிலில் இன்று பங்குனி பிரமோத்ஸவ கொடியேற்றம்

Updated On :15 மார்ச் 2024, 8:30 pm

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை அங்குராா்ப்பணம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 7.50 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தோளுக்கினியானில் பெருமாள் வீதியுலா நடைபெறும். திருவிழா நாள்களில் தினமும் காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். 17 ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 18 ஆம் தேதி ராமா் அலங்காரத்தில் அனுமன் வாகனத்திலும், 19 ஆம் தேதி பரமபதநாதன் அலங்காரத்தில் ஆதிசேஷ வாகனத்திலும், 20 ஆம் தேதி வைகுண்டநாதன் அலங்காரத்தில் இரட்டை கருடசேவையிலும் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 25 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. 26 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சப்தாவா்ணம் ராஜஅலங்காரத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற உள்ளது.