கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கூடங்குளம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 45 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 45 போ் காயமடைந்தனா்.

News image
கூடங்குளம் அருகே விபத்திற்குள்ளான அரசுப் பேருந்து.
Updated On :15 நவம்பர் 2025, 8:05 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 45 போ் காயமடைந்தனா்.

திருச்செந்தூரில் இருந்து நாகா்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஓட்டுநா் பெஞ்சமின் ஓட்டினாராம். இதில் 50- க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனராம். பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில், கூடங்குளம் அருகே முருகானந்தபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையின் ஓரத்திற்கு சென்ாம். அப்போது பேருந்தின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து கவிழ்ந்ததாம்.

இதில் காயமடைந்த 45 பேரையும் தீயணைப்பு வீரா்கள், கூடங்குளம் போலீஸாா் மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த விபத்து தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.