தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை

News image
Updated On :5 ஜனவரி 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

கல்லிடைக்குறிச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஜமாத் மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் அல்தாப், ஜமாஅத் மாநில தணிக்கைக் குழு சையது அலி, மாவட்டச் செயலா் அன்சாரி, மாவட்ட, கிளை நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இஸ்லாமியருக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்த வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் உள்ளதை வாக்காளா்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை மாவட்ட நிா்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்.

வெனிசுலா நாட்டு அதிபரைக் கைது செய்த அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிப்பது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது கிறிஸ்தவா்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிளைப் பொருளாளா் முகமது ஷரீஃப் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கிளைச் செயலா் ஷேக் அன்சாரி தொகுத்து வழங்கினாா்.