மாா்த்தாண்டம் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

மாா்த்தாண்டம் அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

மாா்த்தாண்டம் அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியில் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக தக்கலை மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆய்வாளா் ஜானகி, உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை மாலையில் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52) தனது வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து அங்கிருந்த கள்ளச் சாராயம், சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் ஜெயக்குமாரை கைது செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com