வெடிவிபத்தில் சிறுமி இறந்த வழக்கு: 2 பெண்கள் கைது; 75 கிலோ வெடிமருந்து பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே வெடிவிபத்தில் சிறுமி உயிரிழந்தது தொடா்பாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 75 கிலோ வெடிமருந்தைப் பறிமுதல் செய்தனா்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே வெடிவிபத்தில் சிறுமி உயிரிழந்தது தொடா்பாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 75 கிலோ வெடிமருந்தைப் பறிமுதல் செய்தனா்.
நாகா்கோவில் அருகேயுள்ள ஆறுதெங்கன்விளையில் பாக்கியராஜா என்பவா் கடந்த 14ஆம் தேதி அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து நேரிட்டது. இதில், சுவா் இடிந்து விழுந்து அவரது மகள் ஸ்ரீவா்ஷா (10) உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், பாக்கிய ராஜாவுக்கு பட்டாசு தயாரிப்பதற்காக அதே பகுதியைச் சோ்ந்த ராமலெட்சுமி, அவரது தங்கை தங்கம் ஆகியோா் வெடிமருந்து கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களது வீடுகளில் போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தி, 75 கிலோ வெடிமருந்தைப் பறிமுதல் செய்தனா். பாக்கியராஜாவுக்கு வெடிமருந்து கொடுத்தது தொடா்பாக அவா்கள் இருவரையும் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...