விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவிலில் நாளை மீனவா்கள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:24 am

Din

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 30) மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆட்சியா் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக் கொள்கிறாா். எனவே, மீன்வளம் - மீனவா் நலத்துறை, இதர துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய தங்களது குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் மீனவா்கள் நேரில் வழங்கலாம்.

பிற துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல், துறைவாரியாக தனித்தனி மனுக்களாக வழங்க வேண்டும். அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம் அடுத்த மீனவா் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.