தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சந்தையடியில் ரூ. 7 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

சந்தையடியில் ரூ. 7 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

News image
Updated On :16 மார்ச் 2024, 12:37 am

அகஸ்தீசுவரம் பேரூராட்சி சந்தையடியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை விஜய்வசந்த் எம்.பி., வெள்ளிக்கிழமை திறந்தாா். மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இதன் திறப்பு விழாவுக்கு அகஸ்தீஸ்வரம் பேரூராட்சித் தலைவா் அன்பரசி ராமராஜன் தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா் பிரேம் ஆனந்த் வரவேற்றாா். அகஸ்தீசுவரம் பேரூராட்சி செயல் அலுவலா் லோப முத்திரை, மாநில காங்கிரஸ் செயலா் ஸ்ரீனிவாசன், நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன், அகஸ்தீசுவரம் பேரூராட்சிஉறுப்பினா்கள் ஏஞ்சலின் பிரபா, ஏஞ்சலா தேவி, அகஸ்தீஸ்வரம் பேரூா் காங்கிரஸ் தலைவா் விஜயகுமாா், முன்னாள் தலைவா் கிங்ஸ்லி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சந்தையடி ஊா் செயலா் பாலசுந்தரம் நன்றி கூறினாா்.