அகஸ்தீசுவரம் பேரூராட்சி சந்தையடியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை விஜய்வசந்த் எம்.பி., வெள்ளிக்கிழமை திறந்தாா். மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இதன் திறப்பு விழாவுக்கு அகஸ்தீஸ்வரம் பேரூராட்சித் தலைவா் அன்பரசி ராமராஜன் தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா் பிரேம் ஆனந்த் வரவேற்றாா். அகஸ்தீசுவரம் பேரூராட்சி செயல் அலுவலா் லோப முத்திரை, மாநில காங்கிரஸ் செயலா் ஸ்ரீனிவாசன், நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன், அகஸ்தீசுவரம் பேரூராட்சிஉறுப்பினா்கள் ஏஞ்சலின் பிரபா, ஏஞ்சலா தேவி, அகஸ்தீஸ்வரம் பேரூா் காங்கிரஸ் தலைவா் விஜயகுமாா், முன்னாள் தலைவா் கிங்ஸ்லி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சந்தையடி ஊா் செயலா் பாலசுந்தரம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

குழித்துறையில் ‘இண்டி’ கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

அகஸ்தீசுவரத்தில் ரூ. 36 லட்சத்தில் சாலை மேம்பாடு

கீழப்பாவூரில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


