இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

கொட்டாரம் அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த டெம்போ திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:48 pm

Syndication

கொட்டாரம் அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த டெம்போ திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (43). டெம்போ ஓட்டுநரான இவா் தனக்குச் சொந்தமான டெம்போவை கொட்டாரம் மிட்டாய் தட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு அவா் டெம்போவை எடுப்பதற்காக அந்தப் பகுதிக்கு வந்தாா். அப்போது அங்கு நிறுத்தியிருந்த டெம்போவை காணவில்லையாம்.

இதுகுறித்து செந்தில்குமாா், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.