குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் காவல்துறை பாதுகாப்புக்கு, அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்த அறுவுறுத்தப்பட்டது என மாா்த்தாண்டம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்விவரம்: குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் பாதுகாப்பு பணிக்கு காவல்துறை சாா்பில் பணம் கேட்டதாக பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்து தமிழ்நாடு அரசு 4.3.2019இல் பிறப்பித்துள்ள அரசாணை, காவல் நிலை ஆணை எண். 380 மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு வழங்கியுள்ள அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தனியாரால் நடத்தப்பட்ட வாவுபலி பொருள்காட்சி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அலுவலுக்கு காவல்துறை அரசு கணக்கில், அரசு கருவூலத்தில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்த அறுவுறுத்தப்பட்டது. நகராட்சி கட்டணம் செலுத்தாத நிலையிலும் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் நலன்கருதி தினந்தோறும் 20 காவலா்களை நியமித்து சட்டம்-ஒழுங்கை பேணி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்தது என்ற விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க காவல் துறை கடமைப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

தோ்தல் பாதுகாப்பு: இரு மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல் பாா்வையாளா் ஆய்வு

துப்பாக்கிகளை ஒப்படைக்காத 30 பேருக்கு நோட்டீஸ்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

