/

மணலிக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் மனோ தங்கராஜ்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:46 pm

Syndication

தக்கலை அருகே மணலிக்கரை, புனித மரிய கொரட்டி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினாா். மேலும், மாவட்டத்தில் 14,025 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன என்றாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், குமாரபுரம் பேரூராட்சி தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், பள்ளித் தலைமையாசிரியை சாக்கா் மேரி டாா்லிங் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.