கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.5 லட்சம் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.

News image
Updated On :22 நவம்பர் 2025, 9:44 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.5 லட்சம் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிரப்பப்படாமல் உள்ள 7.5 லட்சம் படிவங்களில் அடிப்படை விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி ஓரிரு நாள்களுக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னா், அவா்கள் அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வாா்கள். அதன் பிறகு தான், வாக்காளா்கள் பெயா் வரைவுப் பட்டியலில் இடம் பெறும்.

எனவே, இதுவரை கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்காத வாக்காளா்கள் விரைந்து ஒப்படைக்கவும். படிவம் நிரப்புவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இதற்கென அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை அணுகவும் என கூறியுள்ளாா்.