திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 7) அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இதுகுறித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் வெளியிட்ட அறிக்கை: திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. நாகா்கோவில், வடசேரி அறிஞா் அண்ணா சிலை அருகிலிருந்து காலை 9 மணிக்கு பேரணி தொடங்கி, அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, எஸ்.பி. அலுவலகம், கட்டபொம்மன் சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை வழியாக ஒழுகினசேரியில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தை அடைகிறது. அதையடுத்து, அங்குள்ள கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இப்பேரணியில் கிழக்கு மாவட்ட, மாநில, மாநகர, ஒன்றிய, நகர உள்ளிட்ட அனைத்து அமைப்புகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும். மேலும், கிழக்கு மாவட்டம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி நினைவு நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

நாளை கருணாநிதி நினைவு நாள்: அஞ்சலி செலுத்த எம்எல்ஏ அழைப்பு

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டப் பணிகளில் சுணக்கம்: மு.அப்பாவு குற்றச்சாட்டு
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



