இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

முக்கடல் சங்கமம் பகுதியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:32 am IST

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கேரள சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்திருந்தனா்.

கன்னியாகுமரியில் அதிகாலை முதலே மழை பெய்த போதிலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் திரண்டனா். விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

மேலும், பகவதியம்மன் கோயில், தூய அலங்கார உபகார மாதா திருத்தலம், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், வட்டக்கோட்டை ஆகிய இடங்களுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். மாலையில் சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதனிடையே, கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக படகு சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், காலை 9.30 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடா்ந்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.