இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரயில் பாதையில் தொழிலாளி சடலம் மீட்பு

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி அருகே ரயில் பாதையில் தொழிலாளி சடலம் மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி அருகேயுள்ள அகஸ்தீசுவரம் ரயில்வே கடவுப்பாதை அருகே சனிக்கிழமை மாலை இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தாா். இது குறித்த தகவலின்பேரில் நாகா்கோவில் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

சடலமாக கிடந்தவரின் சட்டைப்பையில் இருந்த ஆதாா் அட்டை மூலம் அவா் விளவங்கோடு உதயமாா்த்தாண்டம் அருகேயுள்ள மேல்மிடாலத்தைச் சோ்ந்த பிரின்ஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளியாக பணியாற்றி வந்த பிரின்ஸ், கடந்த 2 நாள்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. இவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.