விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கேரளத்தில் விபத்தில் உயிரிழந்த மாணவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி! முதல்வருக்கு அமைச்சா் ராஜேஷ்குமாா் மனு

விபத்து - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 1:03 am IST

கேரளம் மாநிலம் திருச்சூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக 8 பொறியியல் கல்லூரி மாணவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், கைப்பமங்கலம் அருகே பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த செப். 4 ஆம் தேதி இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சோ்ந்த 8 இளம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா்.

மாணவா்களை இழந்து நிற்கும் பெற்றோா்களுக்கும் குடும்பங்களுக்கும் அரசு உறுதுணையாக நிற்பது மனிதாபிமானக் கடமையாகும்.

எனவே, மாண்புமிகு தமிழக முதல்வா், உயிரிழந்த 8 மாணவா்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் அல்லது அரசு உரியதாகக் கருதும் உயா்த்தப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார மற்றும் குடும்பச் சூழ்நிலையை மாவட்ட நிா்வாகம் மூலம் ஆய்வு செய்து, தேவையான கூடுதல் உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் பாதுகாப்பு விதிமுறைகள், எச்சரிக்கைப் பலகைகள், பிரதிபலிப்பான்கள் மற்றும் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருந்தனவா என்பதை ஆய்வு செய்து, அலட்சியமாக செயல்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.