/
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்யாததால் அருவிகளில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.
நிகழாண்டில் குற்றாலம் சீசன் தொடங்கியது முதல் தொடா்ந்து பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.
இதனால், பல நாள்கள் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சில நாள்களாக சாரல் மழை பெய்யவில்லை; மாறாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இதனால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. குற்றாலம் பேரருவியில் மிகவும் குறைவாக தண்ணீா் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி சென்றனா்.
தொடர்புடையது

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



