பாதாள சாக்கடைத் திட்டம்: நெல்லையில் நாளைகலந்தாய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் 2 ஆவது கட்ட பாதாள சாக்கடைத் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.3) நடைபெற உள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சியில் 2 ஆவது கட்ட பாதாள சாக்கடைத் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.3) நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் முதல்கட்டமாக குறிப்பிட்ட வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தச்சநல்லூர் மண்டலத்தில் 1 ஆவது வார்டிலிருந்து 7 ஆவது வார்டு மற்றும் 39 முதல் 55 வார்டுகளில் 2 ஆவது கட்டமாக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 289.01 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரிவாக்கம் செய்யவும், இத்திட்டத்தின்கீழ், செயல்பாட்டில் இல்லாத எஞ்சியுள்ள பகுதியில் எவ்வித விடுதலும் இன்றி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை  4.30 மணிக்கு மாநகராட்சியில் நடைபெற இருப்பதாக ஆணையர்  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com