குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

தானியங்கி மழைமானி நிலையம் அமைக்கும் பணி: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

தானியங்கி மழைமானி நிலையம் அமைக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

Updated On :24 பிப்ரவரி 2024, 8:50 pm

பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தானியங்கி மழைமானி நிலையம் அமைக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக அறியும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டு, அவற்றை நிறுவும் பணியானது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் அளவை கணக்கிடும் பொருட்டு முதற்கட்டமாக திருநெல்வேலி வட்ட அளவில் 3 நிலையங்கள் பாளையங்கோட்டை வட்ட அளவில் 4 நிலையங்கள், அம்பாசமுத்திரம் வட்ட அளவில் 3 நிலையங்கள், சேரன்மகாதேவி வட்ட அளவில் 2 நிலையங்கள், மானூா் வட்ட அளவில் 5 நிலையங்கள், நான்குனேரி வட்ட அளவில் 8 நிலையங்கள், ராதாபுரம் வட்ட அளவில் 7 நிலையங்கள், திசையன்விளை வட்ட அளவில் 7 நிலையங்கள் என மொத்தம் 39 தானியங்கி மழைமானி நிலையங்கள் நிறுவுவதற்கு தகுதியான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தானியங்கி மழைமானி அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். படவரி ற்ஸ்ப்24ழ்ஹண்ய் பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணியை பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா.