சனிப்பெயா்ச்சியையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சனீஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயா்ந்தாா். இதையொட்டி
அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை, சிறப்பு
ஹோமம், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சங்கரேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.