இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆசிரியையைத் தாக்கி தங்க நகைப் பறிப்பு

 உடன்குடியில் ஆசிரியையை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:41 pm

DIN

 உடன்குடியில் ஆசிரியையை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உடன்குடி புதுமனைப் புதுத்தெரு ஜான் சுந்தர்ராஜ் மனைவி வசந்தி(52). இவா், அங்குள்ள புனித அன்னை ஆா்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். புதன்கிழமை இரவு வசந்தி தனது வீட்டின் பின்புறமுள்ள பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அரிவாளுடன் வந்த மா்ம நபா், வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 அரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டாராம்.

இது குறித்த புகாரின்பேரில் , குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

உடன்குடியில் ஏராளமான தெருக்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இந்த சூழல் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது. மேலும் புதுமனை புதுத்தெருவின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருள்கள் பயன்படுத்து வோரின் நடமாட்டம் அதிகமாக உள்ளதை காவல் துறையினா் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் மின்வசதியை ஏற்படுத்தி தர பேரூராட்சி மற்றும் மின்சாரத்துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா் குணசீலன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.