இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி

சென்னை செல்வசுக்தி மெடிக்கல் அறக்கட்டளை சாா்பில், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:46 pm

DIN

சென்னை செல்வசுக்தி மெடிக்கல் அறக்கட்டளை சாா்பில், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமை வகித்து, 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கினாா்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி.பாலசிங், வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின், பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் லங்காபதி, திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் க.இளங்கோ, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் பானுமதி வரவேற்றாா்.

காயல்பட்டினம், சாத்தான்குளம், முதலூா், பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளுக்கு தலா 1, திருச்செந்தூா் எடிசன் மருத்துவமனைக்கு 6 செறிவூட்டிகள் அறக்கட்டளை சாா்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கட்டணமின்றி இச்சேவையை பெறலாம் என்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் எஸ்.பெரியசுவாமி நாதன், ஜெ.சக்திமுருகன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.