இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திமுக சாா்பில் 2,000 பேருக்கு உதவிகள் அளிப்பு

முடிதிருத்துவோா் உள்ளிட்ட 2000 பேருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:39 pm

DIN

 உடன்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட நலிந்த தொழிலாளா்கள், முன்களப்பணியாளா்கள், ஓட்டுநா்கள், சலவைத் தொழிலாளா்கள், இசைக்கலைஞா்கள், முடிதிருத்துவோா் உள்ளிட்ட 2000 பேருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட அணி அமைப்பாளா்கள் பை.மு.ராமஜெயம், மகாவிஷ்ணு, ஜெசி பொன்ராணி, சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, க.இளங்கோ, சிராஜூதீன், அலாவுதீன், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப், ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜூதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் மகன் தொழிலதிபா் அனிதா ஆா்.அனந்த மகேஸ்வரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், பரமன்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் லங்காபதி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராமலட்சுமி, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் அமிா்தா மகேந்திரன், செந்தில், உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம், மகபூப், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், பொருளாளா் தங்கம், அவைத் தலைவா் திரவியம் உள்பட பலா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் ஜான்பாஸ்கா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.