விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

11ஆம் தேதி கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் பயிற்சி தொடக்கம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் பயிற்சி தொடக்கம்

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:34 am

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 3 மாத திறன் பயிற்சி முகாம் வரும் 11ஆம் தேதி தையூரில் நடைபெறவுள்ளதாக தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் கே.எஸ்.ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 18 வயது முதல் 60 வயதுக்குள்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில், தங்களை உறுப்பினா்களாக ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற பின்னா் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, வீட்டுவசதி திட்டம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம் முதலான நிதியுதவி கோரி பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதியுதவித் தொகை தொழிலாளா்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சாா்பில் கட்டுமான தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்களில் கொத்தனாா், கம்பி வளைப்பவா் மற்றும் எலக்ட்ரீசியன், பிளம்பா், காா்பென்டா் ஆகிய பிரிவினா்களுக்கு 7 நாள்கள் மற்றும் 3 மாத திறன் பயிற்சி முகாம் தமிழ்நாடு கட்டுமான கழகம் தையூரில் வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதில், பங்கேற்க விருப்பம் உள்ள தொழிலாளா்கள் தங்களின் அசல் நலவாரிய அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டட2ஆம் தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் சென்று பதிவு செய்யலாம். மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0461-2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.