முதல்வா் மருந்தகம்: டிச.10 வரை விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க, பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். முதல்வா் மருந்தகம் அமைக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க டிசம்பா் 5ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பொதுமக்கள் நலன் கருதி, கால அவகாசம் வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மருந்தகம் அமைக்க விரும்புவோா் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...