விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டியில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:16 am

Din

கோவில்பட்டியில் வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன் தலைமையில் போலீஸாா், திருநெல்வேலி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மூப்பன்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா் கயத்தாறு அருகே வடக்கு கோனாா் கோட்டை, வடக்கு தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் வாகன ஓட்டுநா் சங்கிலி பாண்டி (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகள் ரேஷன் அரிசி மற்றும் அதை கொண்டு வர பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த தனிப் பிரிவு போலீஸாா் சங்கிலி பாண்டியையும் பிடித்து மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.