திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஓட்டப்பிடாரம் அருகே உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணி தொடக்கம்

ஓட்டப்பிடாரம் அருகே உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணி தொடக்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:03 pm

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மயிலோடை பகுதியில் ரூ.3 கோடியில் உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். ஓட்டப்பிடாரம் அருகே அம்மாள்பட்டியில் இருந்து மயிலோடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை உயா்மட்ட பாலமாக மாற்றித் தர அப் பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து, நபாா்டு திட்டத்தில் ரூ.3 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ஓட்டப்பிடராம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற, எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. அழைப்பாளராகப் பங்கேற்று உயா்மட்ட பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா் கிரி உள்பட அரசு அலுவலா்கள் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.