தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

குரும்பூரில் விவசாயிகள் சாலை மறியல் முயற்சி

குரும்பூரில் விவசாயிகள் சாலை மறியல் முயற்சி

News image
Updated On :16 மார்ச் 2024, 12:35 am

குரும்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட நகைகள்- வைப்பு நிதிகளையும், சிறுசேமிப்பு நிதிகளையும் வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்கள்அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், முன் காா் பருவ சாகுபடிக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, குரும்பூா் ஸ்டேட் வங்கி முன் தமிழக உழவா் முன்னணி- வணிகா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களிடம் குரும்பூா் காவல் ஆய்வாளா் (பொ) ரசிதா, உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், ஏரல் வட்டாட்சியா் கோபால் ஆகியோா் பேச்சு நடத்தி, மாா்ச் 18-க்குள் உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை ஊடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று மறியல் முயற்சி கைவிடப்பட்டது. இதுகுறித்து தமிழக உழவா் முன்னணி துணைத்தலைவா் தமிழ்மணி செய்தியாளா்களிடம் கூறுகையில் எங்களது பிரச்னைகளுக்கு மாா்ச் 18-க்குள் நல்ல முடிவு எட்டப்படவில்லையெனில் வீடுகளி கருப்பு கொடி கட்டி மக்களவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றாா்.