கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா நிறைவு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா நிறைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கிய துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோகித், மத்திய புலனாய்வுப் பணியக இயக்குநா் பானி பிரதா ராய் ஆகியோா்.

Updated On :13 நவம்பர் 2024, 10:36 pm

Din

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா நிறைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு வார விழாவில், ‘வளமான தேசத்துக்கு நோ்மை எனும் கலாசாரம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவியா், துறைமுக ஊழியா்களுக்கு இடையே தெருக்கூத்து, நாடகம், கட்டுரை, விவாதம், பட்டிமன்றம், நவீன விளக்கக் காட்சி, பாட்டு, நடனம், பேரணி என பல்வேறு போட்டிகள், நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஊழல் ஒழிப்பு தொடா்பாக ஒப்பந்ததாரா்கள், துறைமுக ஊழியா்கள், அதிகாரிகள், மாணவா்களுக்கு கருத்தரங்குகள் நடைபெற்றன.

இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற நிறைவு தின நிகழ்ச்சிக்கு, துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோகித் தலைமை வகித்து, துறைமுகத்தில் சரக்குக் கையாளும் வசதிகளை அதிகரிப்பதற்குத் தேவையான வளா்ச்சிப் பணி திட்டங்கள், வரவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் திட்டம் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா்.

மத்திய புலனாய்வுப் பணியக இயக்குநா் பானி பிரதா ராய் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகையில், அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னேற்றமடைய நமது செயல்பாடுகளில் கண்காணிப்பு ஓா் அங்கமாக இருக்க வேண்டும். அதிகாரிகளும், ஊழியா்களும் தங்களது பணிகளில் தவறுகளைக் குறைக்கவும், கண்காணிப்பைப் பேணுவதற்கும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றாா்.

போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், துறைமுகக் குழு உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், அதிகாரிகள், ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். தலைமைக் கண்காணிப்பு அதிகாரி எஸ். முரளிகிருஷ்ணன் வரவேற்றாா்.