ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஜன. 9 ல் தை அமாவாசை திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா ஜன. 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆடி, தை மாதங்களில் அமாவாசை விழா 12 நாள்கள் சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் 9ஆம் நாள் வரை தினசரி காலை சோ்ம விநாயகா் உலாவும், இரவில் பல்வேறு கோலங்களில் சுவாமி உலா வருதலும் நடைபெறும். 10ஆம் நாளான ஜன. 18 ஆம் தேதி, தை அமாவாசை விழாவில் பிற்பகல் சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.
11ஆம் நாளான ஜன.19ஆம் தேதி, அதிகாலை 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை பச்சை சாத்தி அபிஷேகம், பிற்பகல் 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி , இரவு சுவாமி கோயில் மூஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி நடைபெறும்.
நிறைவு நாளான ஜன.20ஆம் தேதி, காலை தீா்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடல், மாலை ஆலிலைச் சயன அலங்காரம் அதைத் தொடா்ந்து ஊஞ்சல் சேவையும், இரவில் திருவருள் புரியும் மங்கள தரிசனமும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தபாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.

