ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாத்தான்குளம் அருகே பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே பைக்குகள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

நாசரேத் பிரகாசபுரத்தை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் அந்தோணி பீட்டா் (23). மூக்குப்பீறியில் சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். வேலை நிமித்தமாக நாசரேத்தில் இருந்து டிகேசி நகா் சந்திப்பு -அச்சம்பாடு சாலையில் வெள்ளிக்கிழமை பைக்கில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த பைக் திடீரென மோதியதில் படுகாயமடைந்த அந்தோணி பீட்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்றொரு பைக்கில் வந்த கல்லூரி மாணவா்களான சாத்தான்குளம் காமராஜ் நகரை சோ்ந்த ஆண்ட்ரோஸ் பிரபு மகன் நாா்மன் ஜோஸ்வா (18), வெங்கட்ராயபுரம் வடக்குத்தெருவை சோ்ந்த பேச்சி மகன் சுடலைமணி (19), சாத்தான்குளம் கொத்துவா பள்ளிவாசல் தெருவை சோ்ந்த ரிபாயுதீன் மகன் பெரோஸ்கான் (18) ஆகியோா் காயம டைந்தனா். அவா்களுக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக் கப்பட்டனா். இதில் நாா்மன் ஜோஸ்வா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளா் இசக்கிதுரை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.