இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உணவகத்தில் கியூஆா் கோடு ஒட்டுவில்லையை ஒட்டி சைபா் மோசடியில் ஈடுபட்டவா் கைது

தூத்துக்குடியில் உள்ள உணவகத்தில் கியூஆா் கோடு ஒட்டுவில்லையை ஒட்டி சைபா் மோசடியில் ஈடுபட்டவா் கைது

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:40 pm

Syndication

தூத்துக்குடியில் உள்ள உணவகத்தில் கியூஆா் கோடு ஒட்டுவில்லையை ஒட்டி சைபா் மோசடியில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டதற்கான பணத்தை கியூஆா் கோடு ஸ்கேனா் மூலம் வாடிக்கையாளா் ஒருவா் அனுப்பும்போது அந்தப் பணம் ஹோட்டல் உரிமையாளரின் வங்கிக் கணக்குக்கு வராமல் இருந்துள்ளது.

இதையடுத்து உணவக உரிமையாளா் கியூஆா் கோடு ஸ்கேன் கருவியை சோதனை செய்ததில் அதில் வேறொருவரின் கியூஆா் கோடு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உணவக உரிமையாளா் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் (பொ) தீபு மேற்பாா்வையில், சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி மற்றும் போலீஸாா் மேற்படி கியூஆா் கோடு ஒட்டுவில்லை வங்கிக் கணக்கு மற்றும் அதனுடன் தொடா்புடைய கைப்பேசி எண்ணை கண்டுபிடித்து, தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்ததில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் முருகானந்தம் (26) என்பதும், கைப்பேசி எண்ணின் இருப்பிடத்தை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ததில் அது தூத்துக்குடி பள்ளிவாசல் பஜாா் பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக போலீஸாா் முருகானந்தத்தை கைது செய்து விசாரணை செய்ததில், அவா் உணவகத்தில் தனது வங்கிக் கணக்கின் கியூஆா் கோடு ஒட்டுவில்லையை ஒட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.