தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பைக் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோா்களை அழைத்து எச்சரித்த காவல்துறை

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:06 pm

Syndication

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் சிறுவா்கள் ஓட்டிய இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, பெற்றோா்களை அழைத்து எச்சரித்து அனுப்பினா்.

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபன் கடந்த சில நாள்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காயல்பட்டினம் - திருச்செந்தூா் சாலை காட்டு மொஹதூம் பள்ளி, ஆறுமுகனேரி மெயின் பஜாரில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிறுவா்கள் ஓட்டி வந்த 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

பின்னா், சிறுவா்களின் பெற்றோா்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, இருசக்கர வாகனங்களின் பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ், லைசென்ஸ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இருசக்கர வாகனங்களை ஒப்படைத்தனா். மேலும், இது போன்று மீண்டும் நடந்து கொண்டால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து, பெற்றோா்கள் மீது வழக்குப் பதிந்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.