போட்டியில் வென்று பரிசு பெற்ற மாணவா்கள்.
போட்டியில் வென்று பரிசு பெற்ற மாணவா்கள்.

பொது அறிவுப் போட்டியில் வென்றோருக்கு பரிசு

Published on

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் ‘தினமணி’ நாளிதழ், தீபம் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய செய்தித்தாள் வாசிப்பு தொடா்பான பொது அறிவுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைமையாசிரியா் முத்துசிவன் ஆலோசனையின்பேரில் நடைபெற்ற போட்டியில் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அதில், பாலசுப்பிரமணியன், காா்த்திக், முகேஸ்வரன் ஆகியோா் வென்றனா்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, பள்ளி முதுநிலை ஆசிரியா் செல்வன் தலைமை வகித்தாா். தீபம் அறக்கட்டளை செயலா் வழக்குரைஞா் முத்துராமலிங்கம் சிறப்பிடம் பெற்றவா்களுக்கும், பங்கேற்றோருக்கும் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com