கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் டிஜிடி இல் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாகக் கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2026, ஜூலை மாதம் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் டிஜிடி-இல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வுக் கட்டணம் ரூ. 200 செலுத்தி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய தூத்துக்குடி, துணை இயக்குநா், முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வான கருத்தியல் தோ்வு வருகிற நவ. 4, செய்முறை தோ்வு நவ. 5 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்களை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம். தனித் தோ்வராகத் தோ்வு எழுத விண்ணப்பிக்க அக். 8 கடைசி நாளாகும். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழுத்தாளா், மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய கடற்படையில் பட்டதாரிகளுக்கு அதிகாரிப் பணிகள்; காலியிடங்கள் - 275

தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


