தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

News image

கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

Updated On :27 மார்ச் 2026, 8:53 pm

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை, தூத்துக்குடி பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பிரபு தலைமையில், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இதில் காமராஜ் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணி, பாளையங்கோட்டை சாலை வழியாக தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நிறைவடைந்தது.