பட்டுக்கோட்டை, ஜன. 8: பட்டுக்கோட்டையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பட்டுக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேட்டைப் போக்க வேண்டும். காந்திப் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அந்த அமைப்பின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் இரா. மாரிமுத்து தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் சதா. சிவக்குமார், மாவட்டச் செயலர் கோ. சுரேஷ் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் வைத்திலிங்கம், ராஜேந்திரன், தமிழ்க்காவலன், அமிர்தலிங்கம், சசிக்குமார், மகேந்திரன், குமார், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக குணசேகர் வரவேற்றார். முருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.