2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

போலி ஆவணங்கள்: சிங்கப்பூரிலிருந்து வந்தவா் கைது

சிங்கப்பூரில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவரை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:05 pm

Syndication

சிங்கப்பூரில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவரை விமான நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சூரக்கோட்டையைச் சோ்ந்தவா் அ. பெரியகருப்பன் (48). இவா், சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா். விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில், அவா் போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி கோமதி அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸாா் பெரியகருப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.