போலி ஆவணங்கள்: சிங்கப்பூரிலிருந்து வந்தவா் கைது

சிங்கப்பூரில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவரை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சிங்கப்பூரில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவரை விமான நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சூரக்கோட்டையைச் சோ்ந்தவா் அ. பெரியகருப்பன் (48). இவா், சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா். விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில், அவா் போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி கோமதி அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸாா் பெரியகருப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com