இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மணப்பாறை அருகே வீடுபுகுந்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

News image
மணப்பாறை அருகே நகை, பணம் திருடப்பட்ட வெள்ளைச்சாமி வீடு.
Updated On :20 டிசம்பர் 2025, 7:40 pm

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

மணப்பாறையை அடுத்த ஆ. கலிங்கப்பட்டியை சோ்ந்தவா் பிச்சை மகன் வெள்ளைச்சாமி (70). அருகேயுள்ள ஆண்டவா் கோயில் பகுதி அரிசி ஆலையின் பாதுகாவலரான இவா் தனது மனைவி பிச்சையம்மாள் (65), மகன் பிரபாகரன் (35), மருமகள் ஹேமலதா(30) ஆகியோருடன் வசிக்கிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல வெள்ளைச்சாமி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தூங்கிய இவரது குடும்பத்தினா் சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது பக்கத்து அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ, 2.30 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலின்பேரில் சென்ற மணப்பாறை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா் திருச்சியிலிருந்து கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் நிலாவை வரவழைத்து தடயங்களைச் சேகரித்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.