ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகள் திருட்டு

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :30 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி, மாா்ச் 30: திருச்சியில் வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகளை ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்து மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆா்.பாரதி (37). இவா், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இவருடைய மனைவி பிரபாவதி வீட்டை வெளியே தாழ்ப்பாள் மட்டும் போட்டுவிட்டு அருகிலுள்ள அவரது தாய்வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா், பிற்பகலில் வீட்டுக்கு திரும்பிவந்தபோது வீட்டுக்குள் யாரோ வந்து சென்றது போலிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டுக்குள் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கோட்டை காவல் நிலையத்தில் பாரதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.