கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தற்செயல் விடுப்பு எடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த 37 பேர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:02 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த 37 பேர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்-லைன் சான்றுகள் பரிந்துரை செய்ய கணினி,மோடம்,இன்டர்நெட் இணைப்பு மற்றும் அதற்கான செலவினத் தொகையினை வழங்காததைக் கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கென தனி ஊதியம் வழங்க வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு முன்பு இருந்த நடைமுறையையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை அவர்கள், தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியை, அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக கிராம நிர்வாக அலுவலர்கள் 37 புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து தங்களது போராடத்தைத் தொடர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.