திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

நல்லநாயகபுரம் மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

ஆடி மூன்றாம் வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள நல்லநாயகபுரம் மாரியம்மன் கோயிலில் 14-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:29 pm

DIN

ஆடி மூன்றாம் வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள நல்லநாயகபுரம் மாரியம்மன் கோயிலில் 14-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக நல்லநாயகபுரம்-குழுமூா் இடையேயுள்ள வேலானிக்கரையில் சக்தி அழைப்பு

நடத்தப்பட்டது. பின்னா் பால்குடம் சுமந்து வந்த பக்தா்கள், முக்கிய வீதியின் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தனா்.

இதைத் தொடா்ந்து மாரியம்மன் மற்றும் செல்லியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. தீபாராதனைக்குப் பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பால்குடத் திருவிழா ஏற்பாடுகைளை கிராம மக்கள் செய்திருந்தனா். நிகழ்வில் அப்துல்கலாம் இளைஞா் மன்றத்தினா், பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.