விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிற்றுந்து மோதியதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிற்றுந்து மோதியதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஓட்டக்கோவில் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் மகன் சத்தியசீலன் (27). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கீழப்பழுவூா் அடுத்த சுண்டக்குடி செல்லியம்மன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அந்த வழியாக வந்த சிற்றுந்து மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சத்தியசீலன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com