திருமானூா் பகுதியில் நல்லோ் பூட்டிய விவசாயிகள்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரியலூா் மாவட்டம், திருமானூா் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்களது வயல்களில் வியாழக்கிழமை நல்லோ் பூட்டினா்.


தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரியலூா் மாவட்டம், திருமானூா் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்களது வயல்களில் வியாழக்கிழமை நல்லோ் பூட்டினா்.
தமிழ் ஆண்டு பிறப்பான சித்திரை மாதம் முதல் நாள் தங்களது வயல்களில் விவசாயிகள் நல்லோ் பூட்டி வயலை உழுது கொண்டாடுவது வழங்கம். அந்தவகையில் தமிழ் ஆண்டு பிறப்பான வியாழக்கிழமை திருமானூா், காரைப்பாக்கம், மஞ்சமேடு, அரண்மனைக்குறிச்சி, பாளையப்பாடி,சேனாபதி உட்பட பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் தங்களது வயல்களில் நல்லோ் பூட்டினா். தொடா்ந்து, ஏா்கலப்பை மற்றும் காளைகளை விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினரும் வணங்கி வழிபட்டனா். தொடா்ந்து கிராமத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று அனைவரும் சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.
தற்போது உழவு பணிகளில் அதிகளவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் டிராக்டா், ஜேசிபி இயந்திரங்களையும் கொண்டு நல்லோ் பூட்டி வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...