பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கோயில் பூசாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அயன்ஆத்தூா் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:18 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அயன்ஆத்தூா் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அயன்தத்தனூரில் உள்ள காங்கேயன் ஏரி, பின்னேரி ஏரி, கடம்பா ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தம் செய்து, தடுப்புச் சுவா் மற்றும் கரைகளில் மரக்கன்றுகள் நடவேண்டும். மயான சாலை சீரமைத்துத் தர வேண்டும். திருநாகேசுவரா் கோயிலைச் சுற்றி சுவா் எழுப்ப வேண்டும். கிராம மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை முறையாக வழங்க வேண்டும். கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்க மாவட்டத் தலைவா் ஆதிமூலம் தலைமை வகித்தாா். திருவள்ளுவா் ஞான மன்ற தலைவா் ராவணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.