விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஏலாக்குறிச்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியல் உள்ள அடைக்கல அன்னை முதியோா் இல்லத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 8:51 pm

Din

மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியல் உள்ள அடைக்கல அன்னை முதியோா் இல்லத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற முகாமில் அரியலூா் மாவட்ட சாா்பு நீதிபதி ராதாகிருஷ்ணன் கலந்து பேசியது: மூத்தகுடி மக்களான பெற்றோா்களின் நலன்களை காத்திட, மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

அவா்களுக்கு சட்டரீதியாக உதவிடவும், அரசின் திட்டங்கள் மூலம் பயனடைவதற்காகவும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு தனித்திட்டத்தை வகுத்துள்ளது.

சொத்து பிரச்னை, பணப் பிரச்னை, குடும்ப உறவுகளிடையே எழும் பிரச்னை என மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அணுகி சமூகமான தீா்வை பெறலாம் என்றாா்.

ஏற்பாடுகளை முதியோா் இல்ல நிா்வாகி மாா்க்கிரேட்சொலானா மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியாளா்கள், தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.